< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
7 Jun 2023 11:58 AM GMT

ஆரணி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி

ஆரணியை அடுத்த பையூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 60), கூலி தொழிலாளி. இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், சுந்தரேசன் என்ற மகனும் உள்ளனர்.

நடராஜன் கடந்த 10 நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். மேலும் தற்போது அவருக்கு ஆஸ்துமா நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நடராஜன் நேற்று வீட்டின் அருகே முட்புதர் பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுந்தரேசன் ஆரணி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்