< Back
மாநில செய்திகள்
விருத்தாசலம் அருகேவிஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கடலூர்
மாநில செய்திகள்

விருத்தாசலம் அருகேவிஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
29 Jan 2023 8:21 PM GMT

விருத்தாசலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.


கம்மாபுரம்,

விருத்தாசலம் அருகே உள்ள கொம்பாடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் பாரிவள்ளல் (வயது 38), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் விசாரணை

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பாரிவள்ளல் உயிரிழந்தார்.

இதுகுறித்து பாரிவள்ளல் மனைவி பரஞ்சோதி கொடுத்த புகாரின் பேரில் ஊமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்