< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
13 July 2023 6:45 PM GMT

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே உள்ள ஈசாந்திமங்கலத்தை அடுத்த நாவல்காடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 65), மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர். ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால், அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று காலையில் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனே உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராமச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், இதுபற்றி பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்