< Back
மாநில செய்திகள்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
மாநில செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தினத்தந்தி
|
3 Aug 2023 4:22 PM GMT

‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் தொடர்பாக நாளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை,

தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்திற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு முதல்கட்டமாக இதுவரை 79.66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற முகாமில் 2.63 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இரண்டாம் கட்ட முகாம்கள் வரும் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்