< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புதிய பயனாளிகளுக்கு 'மகளிர் உரிமைத் தொகை' - முதல்-அமைச்சர் நாளை வழங்குகிறார்
|9 Nov 2023 4:44 PM GMT
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகள் இணைந்துள்ளனர்.
சென்னை,
பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக, மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த திட்டத்தில் புதிதாக 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகள் இணைந்துள்ளனர். இந்த புதிய பயனாளிகளுக்கு நாளை மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் நாளை காலை நடைபெறும் விழாவில் புதிய பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகையை வழங்க உள்ளார்.