< Back
மாநில செய்திகள்

கரூர்
மாநில செய்திகள்
பெண் மாயம்

2 Sept 2023 11:54 PM IST
பெண் மாயம் ஆனார்.
தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி பேரூர் வடக்கு உடையாப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பாப்பம்மாள் (வயது 59). இவர் கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாப்பம்மாளின் உறவினர் சரவணன் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான பாப்பம்மாளை தேடி வருகின்றனர்.