< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
தீவிபத்தில் காயமடைந்த பெண் சாவு
|2 Oct 2022 7:07 PM GMT
தீ விபத்தில் காயமடைந்த பெண் பலியானார்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே பல்வாய்கண்டன் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவருடைய மனைவி ரேகா(வயது 30). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று ரேகா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாா். அப்போது எதிர்பாராதவகையில் மண்எண்ணெய் பாட்டில் கவிழ்ந்து கொட்டியதில் ரேகாவின் உடலில் தீப்பற்றி எரிந்தது. வலியால் அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரேகா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.