< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் அழகான ஆண் குழந்தை பிறந்தது
|25 July 2023 9:57 PM GMT
ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
நம்பியூர்
நம்பியூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி நித்யா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நித்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. பின்னர் நித்யா கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அழைத்து ெசல்லப்பட்டார். கொன்னமடை என்ற இடம் அருகே சென்றபோது, நிர்யாவுக்கு பிரசவ வலி அதிகமானது. உடனே டிரைவர் நந்தகுமார் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் கவுரிநாத் நித்யாவுக்கு பிரசவம் பார்த்தார். அப்போது அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு தாயும், சேயும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் நலமாக உள்ளனர்.