< Back
மாநில செய்திகள்
பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் சாவு
கரூர்
மாநில செய்திகள்

பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் சாவு

தினத்தந்தி
|
2 July 2023 6:11 PM GMT

கரூரில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் பரிதாபமாக இறந்தார்.

தீக்குளித்த பெண்

கரூர் ஆண்டாங்கோவில் அருகே உள்ள ஆத்தூர் திருமால் நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 49). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்நிைல சரியாகவில்லை.

இதனால் பரமேஸ்வரி மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

சாவு

இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பற்றி எரிந்த தீயை அணைத்து பரமேஸ்வரியை காப்பாற்றினர். பின்னர் பலத்த தீக்காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரமேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகநாத வடிவேல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்