< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு

தினத்தந்தி
|
29 Oct 2022 5:09 PM GMT

ஆரணி அருகே குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

ஆரணி

கீழ்பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நசீர் பாஷா. இவரது மனைவி ஷகிலா (வயது 40). இவர்களுக்கு தாஹிரா, அசினா பேகம் ஆகிய 2 மகள்களும், திப்பு சுல்தான் என்ற மகனும் உள்ளனர்.

தாஹிராவுக்கும் ஆரணியை அடுத்த குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த அலீம் பாஷா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் மகள் தாஹிராவை பார்ப்பதற்காக ஷகிலா கீழ்பென்னாத்தூரில் இருந்து ஆரணிக்கு வந்தார்.

பின்னர் அலீம்பாஷாவுடன் மோட்டார் சைக்கிளில் குன்னத்தூருக்கு சென்றார். குன்னத்தூர் கூட்ரோடு அருகே செல்லும்போது ஷகீலாவுக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்