< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

தினத்தந்தி
|
18 July 2023 7:39 PM GMT

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள எரிச்சநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மனைவி சித்ரா (வயது 50). இவர் நாரணாபுரத்தை சேர்ந்த வைசியப்பன் மகன் ஹேமந்த் என்பவரின் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது பர்மா காலனி அருகே சென்ற போது திடீரென ஹேமந்த் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த சித்ரா தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து சித்ராவின் மகன் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
மேலும் செய்திகள்