< Back
மாநில செய்திகள்
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
மதுரை
மாநில செய்திகள்

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

தினத்தந்தி
|
19 July 2023 9:05 PM GMT

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

திருமங்கலம்,

கள்ளிக்குடி அருகே டி.வளையங்குளத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 58). இவருடைய மனைவி வேலம்மாள்(54). இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருந்து சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டு மாடிப்படியில் இருந்து மயங்கி விழுந்த வேலம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு விருதுநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட வேலம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்