< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
|24 Jun 2023 7:07 PM GMT
படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்
துவரங்குறிச்சி அருகே உள்ள வளநாடு கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 47). சம்பவத்தன்று முருகன் கோவைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த ஜெயலட்சுமி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.