கடலூர்
கார் கவிழ்ந்து பெண் சாவு
|நெல்லிக்குப்பம் அருகே விபத்தில் கார் கவிழ்ந்து பெண் பலியானார்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் மஞ்சக்குப்பம் புதுஉப்பலவாடி தெருவை சேர்ந்தவர் ராமநாதன் மனைவி ஹேமலா (வயது 52). இவர் தனது உறவினர்கள் பச்சையம்மாள், செல்வராஜ் ஆகியோருடன் காரில் விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு சென்றார். காரை அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் ஓட்டினார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அனைவரும் அதே காரில் கடலூர் புறப்பட்டனர். நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஹேமலா பரிதாபமாக உயிரிழந்தார். லோகேஸ்வரன் உள்ளிட்ட 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.