< Back
மாநில செய்திகள்
ரெயில் மோதி பெண் பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

ரெயில் மோதி பெண் பலி

தினத்தந்தி
|
21 Dec 2022 4:42 PM GMT

குஜிலியம்பாறை அருகே ரெயில் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.

குஜிலியம்பாறை அருகே உள்ள சி.அம்மாப்பட்டியை சேர்ந்தவர் அஞ்சலாதேவி (வயது 60). நேற்று காலை இவர், சி. அம்மாப்பட்டியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மதுரையில் இருந்து சேலம் நோக்கி சென்ற சரக்கு ரெயில் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அஞ்சலா தேவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அஞ்சலாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்