< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு
விழுப்புரம்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு

தினத்தந்தி
|
25 Sep 2023 7:06 PM GMT

திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி ராசாத்தி (வயது 58). இவர் அரசூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ராசாத்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்