< Back
மாநில செய்திகள்
ஆட்டோ கவிழ்ந்து பெண் சாவு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து பெண் சாவு

தினத்தந்தி
|
7 Oct 2023 6:42 PM GMT

ஆம்பூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

ஆம்பூர்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த பெண்கள் ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தனர். அதன்படி நேற்று 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஷேர் ஆட்டோவில் ஆம்பூர் நோக்கி வந்தனர்.

கடாம்பூர் அருகே வந்தபோது நாய் ஒன்று குறுக்கே ஓடியது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் ஆட்டோவை நிறுத்த முயற்சித்தார். அப்போது திடீரென ஆட்டோ நிலை தடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் பேரணாம்பட்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் மனைவி ஹேமாவதி (வயது 35) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்