< Back
மாநில செய்திகள்
தீயில் கருகி பெண் சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

தீயில் கருகி பெண் சாவு

தினத்தந்தி
|
25 March 2023 6:45 PM GMT

பரமத்தி அருகே தீயில் கருகிய பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பரமத்திவேலூர்

எஸ்.வாழவந்தி அருகே உள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி (வயது 34). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நீலாவதி கடந்த 17-ந் தேதி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அடுப்பு எரியாததால் மண்எண்ணெய்யை அடுப்பில் ஊற்றிய போது திடீரென தீப்பிடித்து அவரது உடல் முழுவதும் பற்றி எரிந்துள்ளது. இதில் அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயில் கருகி படுகாயம் அடைந்த அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நீலாவதி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் நீலாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்