< Back
மாநில செய்திகள்
மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு
தென்காசி
மாநில செய்திகள்

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு

தினத்தந்தி
|
7 March 2023 6:45 PM GMT

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி சண்முகத்தாய் (வயது 56). இவர் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான நெடுங்குளத்துக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை வேல்முருகன் என்பவர் ஓட்டினார்.

நெல்லை சாலையில் மோட்டார் சைக்கிள் சென்ற போது எதிரே காந்திநகரை சேர்ந்த முப்புடாதி என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் திடீரென மேலே சென்ற கேபிள் வயரில் மோதியது. இதனால் அந்த வயர் தட்டியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து சண்முகத்தாய் தவறி விழுந்து காயம் அடைந்தார்.

அவரை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சண்முகத்தாய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்