< Back
மாநில செய்திகள்
ராஜாக்கமங்கலம் அருகே தாய் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே தாய் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை

தினத்தந்தி
|
7 March 2023 9:34 PM GMT

ராஜாக்கமங்கலம் அருகே தாய் இறந்த சோகத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே தாய் இறந்த சோகத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாயார் சாவு

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள வண்டாவிளையை சேர்ந்தவர் அப்பாதுரை. இவரது மகள் செல்வமகள் (வயது45), இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்தநிலையில் செல்வமகளின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அதன்பின்பு செல்வமகள் மிகுந்த மன வேதனையில் இருந்தார். அவருக்கு தந்தை அப்பாதுரை மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாடியில் உள்ள அறையில் செல்வமகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து உறவினர்கள் ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயார் இறந்து சோகத்தில் பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்