< Back
மாநில செய்திகள்
ஆரல்வாய்மொழி அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை

தினத்தந்தி
|
21 Aug 2022 9:33 PM GMT

ஆரல்வாய்மொழி அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை

ஆரல்வாய்மொழி'

ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் இலந்தைநகரை சேர்ந்தவர் அருள்ஷா. இவருடைய மனைவி அருமை ராணி (வயது 38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வெளிநாட்டில் வேலை செய்து வந்த அருள்ஷா தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதற்கிடையே அருமை ராணி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அருமை ராணி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருமை ராணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்