< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து பெண் தற்கொலை
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

தினத்தந்தி
|
3 Aug 2022 4:49 PM GMT

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ், கூலித் தொழிலாளி. இவரது மனைவி உஷா (வயது 30). இவர் நீண்ட நாட்களாக உசல்நலம்பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் உஷா வீட்டில் யாரும் இல்லாத போது நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த இவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்