< Back
மாநில செய்திகள்
பெண் விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பெண் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
5 Jun 2022 10:09 AM GMT

சாத்தான்குளம் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே நெடுங்குளம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சிதம்பரம் மனைவி ராமலட்சுமி (வயது 40). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சிதம்பரம், கடந்த 7 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ராமலட்சுமி, கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார். இதனிடையே ராமலட்சுமிக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சிலருக்கும் பிரச்சினை ஏற்பட்டது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று சிலர், ராமலட்சுமியை அவதூறாக பேசினராம். இதனால் மனமுடைந்த ராமலட்சுமி, வீட்டில் விஷத்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதை கவனித்த உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்