< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
விஷம் குடித்து பெண் தற்கொலை
|25 July 2023 6:45 PM GMT
பட்டுக்கோட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் காமராஜ். தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (வயது 43). சம்பவத்தன்று வீட்டில் சித்ரா சமைக்காததால், அவரை காமராஜ் திட்டடியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சித்ரா பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதையடுத்து அவரை பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காமராஜ் பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.