< Back
மாநில செய்திகள்
பாம்பு கடித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

பாம்பு கடித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

தினத்தந்தி
|
3 July 2023 6:45 PM GMT

பாம்பு கடித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி ஜெயா (வயது 42). விவசாய கூலித்தொழிலாளி. கடந்த 30-ந்தேதி அதே பகுதியில் உள்ள வயலில் பருத்தி எடுக்கும் பணியில் ெஜயா ஈடுபட்டார். அப்போது அவரை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜெயா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்