< Back
மாநில செய்திகள்
பெண் அடித்துக்கொலை?
நாமக்கல்
மாநில செய்திகள்

பெண் அடித்துக்கொலை?

தினத்தந்தி
|
12 May 2023 6:46 PM GMT

கொல்லிமலையில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேந்தமங்கலம்

அடிக்கடி தகராறு

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் வாழவந்தி நாடு ஊராட்சி செம்மேடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 52). லாரி டிரைவர். இவரது மனைவி கவிதா (48). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ரவிக்குமார், கவிதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து கவிதா வீட்டிற்குள் தூங்க சென்று விட்டார். அதிகாலையில் ரவிக்குமார் எழுந்து பார்த்தபோது கவிதா இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த சம்பவம் தொடர்பாக கவிதாவின் உறவினர்கள் வாழவந்தி நாடு போலீசில் புகார் செய்தனர்.

போலீஸ் விசாரணை

இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிதாவின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கவிதா அவரது கணவர் அடித்ததால் இறந்தாரா? அல்லது உடல் நலக்குறைவு காரணமாக இறந்தாரா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்