< Back
மாநில செய்திகள்
வீட்டில் நகைகளை திருடிய பெண் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

வீட்டில் நகைகளை திருடிய பெண் கைது

தினத்தந்தி
|
22 Aug 2022 7:04 PM GMT

வீட்டில் நகைகளை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி மெயின்ரோடு தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சுபா(வயது 32). இவர் சம்பவத்தன்று, வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டிற்குள் இருந்த பீரோவின் கதவு திறக்கப்பட்டு, அதில் இருந்த ஒரு பவுன் சங்கிலி, 3 ஜோடி தோடு உள்பட மொத்தம் 17 கிராம் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சுபா கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், நகைகளை திருடியது வீரசோழபுரம் வீராரெட்டி தெருவை சேர்ந்த நவீன்குமாரின் மனைவி சினேகா(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து சினேகாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்