< Back
மாநில செய்திகள்
ஸ்கூட்டரில் மது பாட்டில்களை கடத்தி வந்த முதியவர் கைது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ஸ்கூட்டரில் மது பாட்டில்களை கடத்தி வந்த முதியவர் கைது

தினத்தந்தி
|
5 July 2023 8:59 PM GMT

பூதலூரில் ஸ்கூட்டரில் மது பாட்டில்களை கடத்தி வந்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

திருக்காட்டுப்பள்ளி;

பூதலூர் போலீசார் வடக்கு பூதலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த ஸ்கூட்டரில் சீட்டுக்கு அடியில் 15 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து ஸ்கூட்டியை ஓட்டி வந்த சித்தாயல் தெருவை சேர்ந்த முருகேசனை(வயது65) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

மேலும் செய்திகள்