< Back
மாநில செய்திகள்
துப்பாக்கியால் சுட்டு டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது ஏன்? - அதிர்ச்சி தகவல்
மாநில செய்திகள்

துப்பாக்கியால் சுட்டு டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது ஏன்? - அதிர்ச்சி தகவல்

தினத்தந்தி
|
7 July 2023 3:56 AM GMT

கடந்த 2 நாட்களாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

சென்னை,

கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் விஜயகுமார் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் இதற்கு முன்னர் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் இருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தநிலையில், துப்பாக்கியால் சுட்டு டிஐஜி தற்கொலை செய்து கொண்டது ஏன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதில்,

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

நேற்றிரவு துணை ஆணையர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார் விஜயகுமார். கடந்த 2 நாட்களாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. பணி சுமை காரணம் இல்லை என்றும் மன உளைச்சல் காரணமாகவே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்