< Back
மாநில செய்திகள்
வேகத்தடையில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க வேண்டும்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

வேகத்தடையில் வெள்ளை நிற 'பெயிண்ட்' அடிக்க வேண்டும்

தினத்தந்தி
|
30 July 2023 8:00 PM GMT

வேகத்தடையில் வெள்ளை நிற ‘பெயிண்ட்’ அடிக்க வேண்டும்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே மேட்டுப்பாளையம் கிராமம் உள்ளது. பல்லடத்தில் இருந்து காய்கறி, மாடு, கோழி ஏற்றி வரும் லாரிகள் இந்த கிராமம் வழியாக கேரளாவிற்கு சென்று வருகின்றன. அவை அதிவேகமாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. இதை தடுக்கும் வகையில் மேட்டுப்பாளையம் கிராமத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் அதில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்படவில்லை. இதன் காரணமாக இரவில் அங்கு வேகத்தை இருப்பதே தெரிவது இல்லை. இதனால் அங்கு விபத்துகள் அதிகரித்து வருகிறது.

எனவே அந்த வேகத்தடையில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்