< Back
மாநில செய்திகள்
குளிக்க சென்றபோதுவெந்நீர் கொட்டியதில் விவசாயி சாவு
தேனி
மாநில செய்திகள்

குளிக்க சென்றபோதுவெந்நீர் கொட்டியதில் விவசாயி சாவு

தினத்தந்தி
|
21 Aug 2023 6:45 PM GMT

போடி அருகே குளிக்க சென்றபோது வெந்நீர் கொட்டியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 49). விவசாயி. சம்பவத்தன்று இவர், குளிப்பதற்காக வாளியில் வெந்நீரை எடுத்து கொண்டு வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது வெந்நீர் கொட்டியது. இதில் உடல் முழுவதும் காயமடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணியின் அண்ணன் முருகன் போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்