< Back
மாநில செய்திகள்
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும்உபதேசியார்கள், பணியாளர்களுக்கு நல வாரியம்
சிவகங்கை
மாநில செய்திகள்

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும்உபதேசியார்கள், பணியாளர்களுக்கு நல வாரியம்

தினத்தந்தி
|
9 April 2023 6:45 PM GMT

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணி புரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணி புரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நல வாரியம்

கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளிகளின் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் உள்ளிட்டோரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணி புரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

இந்நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்ப படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணி புரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

அதன்படி, கல்வி உதவித்தொகை 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், தொழிற் கல்வி, பட்டப்படிப்பு வரை, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1 லட்சம், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை, இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20 ஆயிரம்,, ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரம், திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3 ஆயிரம், பெண்களுக்கு ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம், கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரம்,, கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்