< Back
மாநில செய்திகள்
வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்
அரியலூர்
மாநில செய்திகள்

வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

தினத்தந்தி
|
20 Sep 2023 7:00 PM GMT

போலீசாரின் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் அரியலூரில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த முகாமில் மொத்தம் 11 மனுக்கள் விசாரிக்கப்பட்டன. மனுதாரர்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்