< Back
மாநில செய்திகள்
தலங்கை கிராமத்தில் வாரச்சந்தை தொடக்க விழா
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

தலங்கை கிராமத்தில் வாரச்சந்தை தொடக்க விழா

தினத்தந்தி
|
21 May 2022 6:08 PM GMT

தலங்கை கிராமத்தில் வாரச்சந்தையை முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள தலங்கை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அருகே வாரச்சந்தை தொடக்க விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கங்காபாய் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தலங்கை மாரிமுத்து, செங்கல்நத்தம் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வாரச்சந்தையை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகள் வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் செங்கல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பட்டறை மணி, ரவிசந்திரன், தி.மு.க. தலைமை கழக போச்சாளர் சீனிவாசன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்