< Back
மாநில செய்திகள்
அமராவதி அணையில் இருந்து 24-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

அமராவதி அணையில் இருந்து 24-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு

தினத்தந்தி
|
21 Jun 2024 5:41 PM GMT

திருப்பூர் மாவட்ட பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை பழைய பாசனத்துக்குட்பட்ட ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்காரை கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 பழைய ராஜ வாய்க்காலங்கள் உள்ளன.

இந்த பாசனப்பகுதிகளுக்கு, வருகிற 24-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 6-ந்தேதி வரை 135 நாட்களில், 80 நாட்கள் தண்ணீர் திறப்பு, 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில், முதல் போக பாசத்துக்காக அமராவதி அணையில் இருந்து 2 ஆயிரத்து 74 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்