< Back
மாநில செய்திகள்
வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசன வாய்க்கால் மூலம் 417 கனஅடி நீர் வெளியேற்றம்
மாநில செய்திகள்

வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசன வாய்க்கால் மூலம் 417 கனஅடி நீர் வெளியேற்றம்

தினத்தந்தி
|
15 Oct 2022 11:21 AM GMT

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசன வாய்க்கால் மூலம் விவசாய தேவைக்கு 417 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டமான 47.5 அடியில் தற்போது 45.8 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 1,311 கன அடியாக ஆக அதிகரித்துள்ளது.

இதனால் ஏரியில் இருந்து மதகுகள் மூலமாக 831 அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் வீராணம் ஏரியில் இருந்து பாசன வாய்க்கால் மூலம் விவசாய தேவைக்கு 417 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க்கது.

மேலும் செய்திகள்