< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில் நீர், மோர் பந்தல்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் நீர், மோர் பந்தல்

தினத்தந்தி
|
15 April 2023 6:57 PM GMT

அ.தி.மு.க.சார்பில் கள்ளக்குறிச்சியில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் கோடை வெயிலை யொட்டி பொதுமக்கள் நலன் கருதி நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் பாபு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.அழகுவேல்பாபு, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், மாவட்ட அவைத்தலைவர் பச்சையா பிள்ளை, ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருப்பதி தேவஸ்தான அறங்காலர் குழு உறுப்பினரும், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளருமான குமரகுரு கலந்து கொண்டு நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர், மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் வினோத்குமார், முன்னாள் எம்.பி.காமராஜ், மாவட்ட நிர்வாகி செல்வராஜ், நகர துணை செயலாளர் முருகன், நிர்வாகிகள் அய்யாக்கண்ணு, குட்டி, கோபி, வெங்கடேசன், ஜெயராமன், முத்துராமன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்