< Back
மாநில செய்திகள்
குளவி கொட்டி 6 பேருக்கு மயக்கம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

குளவி கொட்டி 6 பேருக்கு மயக்கம்

தினத்தந்தி
|
27 Jan 2023 6:55 PM GMT

கலவை அருகே குளவி கொட்டி 6 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது.

கலவையை அடுத்த மேச்சேரி புதிய காலனி பஜனை கோவில் தெருவின் அருகே நேற்று மாலை 4 மணி அளவில், கற்பகம் (வயது 57), ராணி (45), துர்கா (32), நித்தியா (34), ரேணுகா (19), கோவிந்தசாமி (49) ஆகிய 6 பேர் அந்தப்பகுதியில் சென்றுள்ளனர். அப்போது முட்முதரில் இருந்த குளவிகள் அவர்கள் 6 பேரையும் கொட்டி உள்ளது.

இதில் மயக்கம் அடைந்த அவர்களை கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர் சதீஷ்குமார் சிகிச்சை அளித்து வருகிறார்.

மேலும் செய்திகள்