< Back
மாநில செய்திகள்
தொழில்நெறி வழிகாட்டும்-திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்-மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று நடக்கிறது
அரியலூர்
மாநில செய்திகள்

தொழில்நெறி வழிகாட்டும்-திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்-மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று நடக்கிறது

தினத்தந்தி
|
10 July 2022 6:00 PM GMT

தொழில்நெறி வழிகாட்டும்-திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று (திங்கட்கிழமை) மாற்றுத்திறனாளிகளுக்கு நடக்கிறது.

தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் அனுசரித்தல் தொடர்பாக அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் வாயிலாக, மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பாக பல்வேறு சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மதியம் 2.30 மணியளவில் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடக்கிறது. மேலும் தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மகளிர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நாளை மறுநாள் (புதன்கிழமை) அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்திலும் நடக்கிறது. வருகிற 14-ந்தேதி அமைப்புசாரா உடலுழைப்பு தொழிலாளர்களது முன்கற்ற திறனை அங்கீகரித்தல் மற்றும் பயிற்சியளித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்திலும், 15-ந்தேதி அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காலை 11 மணியளவில் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் நடைபெறவுள்ளது. இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்