< Back
மாநில செய்திகள்
விவேகானந்தர் மண்டபத்தை   32,700 பேர் பார்த்தனர்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

விவேகானந்தர் மண்டபத்தை 32,700 பேர் பார்த்தனர்

தினத்தந்தி
|
25 Oct 2022 8:56 PM GMT

தீபாவளி விடுமுறையையொட்டி விவேகானந்தர் மண்டபத்தை 32,700 பேர் பார்த்தனர்.

தீபாவளி விடுமுறையையொட்டி விவேகானந்தர் மண்டபத்தை 32,700 பேர் பார்த்தனர்.

விவேகானந்தர் மண்டபம்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரி சுற்றுலா வரும் பயணிகள் முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்துவிட்டு, கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பார்கள்.

இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

32,700 பேர் பார்த்தனர்

தீபாவளி விடுமுறையையொட்டி கடந்த 22-ந்தேதி 5 ஆயிரத்து 50 ேபரும், 23-ந்தேதி 7 ஆயிரத்து 750 பேரும், தீபாவளி தினமான நேற்று முன்தினம் 9 ஆயிரத்்து 400 பேரும், நேற்று 10 ஆயிரத்து 500 பேர் என 4 நாட்களில் மொத்தம் 32 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர்.

தற்போது திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி தொடங்கியுள்ளதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்