< Back
மாநில செய்திகள்
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருப்பூர்
மாநில செய்திகள்

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தினத்தந்தி
|
21 Sep 2023 5:00 PM GMT

திருப்பூரில் கலைநிகழ்ச்சிகளுடன் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. செண்டை மேளம் முழங்க, கண்கவர் அலங்கார வாகனங்கள் அணிவகுத்து சென்ற ஊர்வலத்தை திரளானவர்கள் கண்டுகளித்தனர்.

திருப்பூரில் கலைநிகழ்ச்சிகளுடன் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. செண்டை மேளம் முழங்க, கண்கவர் அலங்கார வாகனங்கள் அணிவகுத்து சென்ற ஊர்வலத்தை திரளானவர்கள் கண்டுகளித்தனர்.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. பின்னர் பகுதி வாரியாக சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

திருப்பூர் மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் வழிபாடு மற்றும் அன்னதானம், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலம் நேற்று மாலை திருப்பூரில் நடைபெற்றது.

காடேஸ்வரா சுப்பிரமணியம்

திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம் சோதனை சாவடி அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆர்.எஸ்.எஸ்.கோட்ட தலைவர் பழனிசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன்உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

பெண்கள் முளைப்பாரியுடன், ெசண்டை மேளம் முழங்க விநாயகர் சிலைகளுடன் கூடிய அலங்கார வாகனங்கள் அணிவகுத்தன. கரட்டாங்காடு, பெரிச்சிப்பாளையம், திரு.வி.க.நகர், வெள்ளியங்காடு நால்ரோடு, தென்னம்பாளையம், பழைய பஸ் நிலையம், பூக்கடை முக்கு, டைமண்ட் தியேட்டர் ரோடு வழியாக ஊர்வலம் ஆலங்காடு வந்தடைந்தது.

புதிய பஸ் நிலையம்

திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன் விநாயகர் சிலை ஊர்வலத்தை ஈஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். காவிக்கொடி ஏந்திய வீரர்கள், அணிவகுப்பு, மயிலாட்டம், சேவல் ஆட்டம் ஆடி ஊர்வலமாக சென்றனர்.

அதைத்தொடர்ந்து 25 தலைகளுடன் பிரமாண்ட விநாயகர், ஆஞ்சநேயர் அலங்கார வண்டிகள் சென்றன. ஊர்வலம் பி.என்.ரோடு, 60 அடி ரோடு, எம்.எஸ்.நகர், கொங்கு மெயின் ரோடு, பிரிட்ஜ்வே காலனி, மில்லர் பஸ் ஸ்டாப், மேம்பாலம், நடராஜா தியேட்டர் ரோடு வழியாக ஆலங்காடு வந்தது.

செல்லம் நகர் பிரிவு

இதுபோல் மங்கலம் ரோடு செல்லம் நகர் பிரிவு பகுதியில் கோட்ட செயலாளர் செந்தில்குமார், கவுன்சிலர் அன்பகம் திருப்பதி ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கிவைத்தனர். கே.டி.சி. பள்ளி வீதி, வேப்பங்காடு பங்களா, மேற்கு பிள்ளையார் கோவில், ஏ.பி.டி.ரோடு வழியாக ஊர்வலம் ஆலங்காடு வந்தடைந்தது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டம் முடிந்ததும் விநாயகர் சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன.

Related Tags :
மேலும் செய்திகள்