< Back
மாநில செய்திகள்
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
17 Oct 2022 6:48 PM GMT

நெமிலியில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர்கள் தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உதவியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கபிர்தாஸ் தலைமை தாங்கினார். வட்ட நிர்வாகிகள் மாரிமுத்து, அருணாசலம், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தற்போது கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்