< Back
மாநில செய்திகள்
திருச்சியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது..!
மாநில செய்திகள்

திருச்சியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது..!

தினத்தந்தி
|
30 July 2023 4:50 AM GMT

திருச்சியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விபசார தடுப்பு பிரிவு போலீஸ் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வீட்டில் ஷைன் ஸ்பா என்ற பெயரில் கர்நாடகத்தை சேர்ந்த லட்சுமி தேவி என்பவரும், 2 பெண்களும் இருந்தனர். மேலும் வீட்டில் உள்ள பொருட்களை சோதனை செய்தபோது இந்த ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த 2 பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலாளர் லட்சுமி தேவியை கைது செய்தனர். விசாரணையில், திருச்சி வயலூர் பகுதியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வரும் செந்தில் என்பவர்தான் இந்த ஸ்பாவின் உரிமையாளர் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செந்திலை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்திலை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்