< Back
மாநில செய்திகள்
வீரமாகாளியம்மன் கோவில் வைகாசி பெருவிழா
திருவாரூர்
மாநில செய்திகள்

வீரமாகாளியம்மன் கோவில் வைகாசி பெருவிழா

தினத்தந்தி
|
22 May 2022 7:10 PM GMT

வல்லூர் வீரமாகாளியம்மன் கோவில் வைகாசி பெருவிழா நடைபெற்றது.

திருமக்கோட்டை:

திருமக்கோட்டை அருகே வல்லூர் கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோவில் வைகாசி பெருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, மாவிளக்கு போடுதல் நடைபெற்றது. இதை தொடர்ந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்தும் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மன் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்