< Back
மாநில செய்திகள்
டிராக்டர் மீது வேன் மோதி 3 பேர் படுகாயம்
கரூர்
மாநில செய்திகள்

டிராக்டர் மீது வேன் மோதி 3 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
26 Feb 2023 6:34 PM GMT

டிராக்டர் மீது வேன் மோதி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

நச்சலூர் அருகே உள்ள பொய்யாமணி ஊராட்சி பங்களாபுதூரை சேர்ந்தவர்கள் தெய்வசிகாமணி (வயது 31). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார், பொய்யா மணியை சேர்ந்தவர் சிவகுமார் (34). அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (42). இவர்கள் 4 பேரும் சம்பவத்தன்று ஓரு ஆம்னி வேனில் கீரை கட்டுகளை ஏற்றி கொண்டு திருச்சி காந்தி மார்க்கெட்டிக்கு வந்து விற்று விட்டு, ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை ராஜ்குமார் ஓட்டினார். அப்போது இனுங்கூர் -பங்களா புதூர் இடையே உள்ள சாலையில் நின்றிருந்த டிராக்டர் மீது ஆம்னி வேன் மோதியது.

இதில் தெய்வசிகாமணி, சிவகுமார், நாகராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர். டிரைவர் ராஜ்குமார் காயமின்றி தப்பினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்