< Back
மாநில செய்திகள்
வாலிகண்டபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வாலிகண்டபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
8 Sep 2022 6:49 PM GMT

வாலிகண்டபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வாலிகண்டபுரம் கிராமத்தில் ஆர்ய வைஸ்ய சமூகத்தினரின் குல தெய்வமான கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மற்றும் செல்வவிநாயகர், பாலமுருகர், நாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகத்தையொட்டி கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், துர்கா லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், திரவிய ஹுதி, மஹா பூர்ணா ஹுதி ஆகியவை நடைபெற்றது. நேற்று நாடி சந்தானம், மங்கள திரவிய யாகத்தோடு யாக சாலையிலிருந்து மேளதாளம் முழங்க கடங்கள் புறப்பட்டு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கோபுரத்திற்கு வந்தடைந்தது. பின்னர் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் வாலிகண்டபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்