< Back
மாநில செய்திகள்
வைகுண்டவாச பெருமாள் கோவில் தேரோட்டம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

வைகுண்டவாச பெருமாள் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
3 Jun 2023 6:45 PM GMT

விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனர்

விழுப்புரம்

பிரம்மோற்சவ விழா

விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்டவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலாவும், 1-ந் தேதி திருக்கல்யாணமும் நடந்தது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் வைகுண்டவாச பெருமாள் எழுந்தருளினார். இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். இத்தேர், கோவிலின் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

அதன் பிறகு வைகுண்டவாச பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் லட்சுமி, அர்ச்சகர் கோபால் பட்டாச்சாரியார் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்