< Back
மாநில செய்திகள்
முத்தாலம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா
விருதுநகர்
மாநில செய்திகள்

முத்தாலம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா

தினத்தந்தி
|
2 Jun 2022 7:26 PM GMT

விருதுநகர் அருகே முத்தாலம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது.

விருதுநகர்,

விருதுநகர் அருகே எம்.அழகாபுரி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 1-ந் தேதி அம்மனுக்கு கண் திறக்கப்பட்டு சக்தி நிறுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், முளைப்பாரி எடுத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் நேற்று மாலை அம்மன் வீதியுலா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


மேலும் செய்திகள்