< Back
மாநில செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் 4 மாதம் முதல் 8 மாதம் வரையிலானகிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தும் பணி28-ந்தேதி வரை நடக்கிறது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் 4 மாதம் முதல் 8 மாதம் வரையிலானகிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தும் பணி28-ந்தேதி வரை நடக்கிறது

தினத்தந்தி
|
7 Feb 2023 7:49 PM GMT

தஞ்சை மாவட்டத்தில் 4 மாதம் முதல் 8 மாதம் வரையிலான கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தும் பணி வருகிற 28-ந்தேதி வரை நடக்கிறது.

தஞ்சை மாவட்டத்தில் 4 மாதம் முதல் 8 மாதம் வரையிலான கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தும் பணி வருகிற 28-ந்தேதி வரை நடக்கிறது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கருச்சிதைவு நோய்

புரூசெல்லோசிஸ் என்பது பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இது புருசெல்லா அபார்டஸ் என்ற பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் தீவிர காய்ச்சலும், சினை பருவத்தில் கன்று ஈனும் தருவாயில் (5 முதல் 8 மாத கால கர்ப்ப பருவத்தில்) கருச்சிதைவும் ஏற்படுகிறது.

மேலும் நோயினால் நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவினால் பொருளாதார இழப்பு ஆகியவை ஏற்படுகிறது. இந்த நோய்வாய்ப்பட்ட மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கையாளும் பட்சத்தில் மனிதர்களுக்கும், இந்த நோய் தீவிர தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.

தடுப்பூசி

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக முதன்முறையாக புரூசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த நோய்க்கான தடுப்பூசியை 4 மாதம் முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு செலுத்தும் பணி வருகிற 28-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த தடுப்பூசியை ஒருமுறை செலுத்திக்கொண்டால் அந்த கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இந்த தடுப்பூசி திட்டமானது ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒருமுறை செயல்படுத்தப்படும். காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசியை செலுத்தக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்