< Back
மாநில செய்திகள்
நாமக்கல் உழவர் சந்தையில்  ரூ.8½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை  கத்தரிக்காய் கிலோ ரூ.46-க்கு விற்றது
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை கத்தரிக்காய் கிலோ ரூ.46-க்கு விற்றது

தினத்தந்தி
|
22 May 2022 1:23 PM GMT

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 28¼ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8½ லட்சத்துக்கு விற்பனையானது.

நாமக்கல்:

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 28¼ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8½ லட்சத்துக்கு விற்பனையானது.

உழவர் சந்தை

நாமக்கல் - கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் இங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

அந்த வகையில் நேற்று 22¼ டன் காய்கறிகள் மற்றும் 6 டன் பழங்கள் என மொத்தம் சுமார் 28¼ டன் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.8 லட்சத்து 62 ஆயிரத்து 620-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 5,620 பேர் வாங்கி சென்றனர்.

விலை விவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று கத்தரிக்காய் கிலோ ரூ.46-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.36-க்கும், புடலங்காய் கிலோ ரூ.40-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.60- க்கும், பீட்ரூட் கிலோ ரூ.50-க்கும், கேரட் கிலோ ரூ.40-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.76-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.22-க்கும், இஞ்சி கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்ன வெங்காயம் கிலோ ரூ.20-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.24-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

காய்கறிகளின் வரத்து சற்று குறைந்து இருந்ததால், அவற்றின் விலை உயர்ந்து காணப்பட்டதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் கிலோ ரூ.28-க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் நேற்று கிலோவுக்கு ரூ.18 உயர்ந்து கிலோ ரூ.46-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.100-ஐ தாண்டி உள்ள நிலையில், நேற்று உழவர்சந்தை தக்காளி விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்